Saturday 27 February 2010

நடை பாதை ஓவியன்


கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியோடு
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்த்த பொழுது
வந்தது மழை.
குடையுடன் கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.