கரு மேகங்கள் இரண்டற கலந்து
சிறு தூறலாய் ஆரம்பித்த மழை,
அருவியாக
பொழிந்து,பெருநகரின்
கரி படிந்த மரங்களின்
இலைகளை கழுவி,
அரசு பேருந்துகளுக்கே உரிய
பெட்ரோலும் வியர்வையும் சேர்ந்த
வாசனையை துடைத்து,
துண்டு பீடி முதலாக கிடைத்த
அத்தனை கழிவுகளையும்
வாரி ஒதுக்கி
சாலைகள் மெழுகி
கடல் சேர்ந்தது..
மழை என்பது
கிராமங்களுக்கு வாழ்வாதாரம் !
நகரங்களுக்கு
சுகாதாரம் !!
வாழிய மாமழையே!