Saturday 27 February 2010

கண்ணாடி

ஈருடல்
ஓருயிர்
உண்மையானது
கண்ணாடி
பார்க்கும் பொழுது
மட்டும்!

நடை பாதை ஓவியன்


கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியோடு
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்த்த பொழுது
வந்தது மழை.
குடையுடன் கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.